"வடகிழக்கு தமிழ் மக்களின் உதவி தேவையில்லையென்ற இனவாத கருத்தினை தெரிவிக்கும் தலைமையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் உண்மையில் தமிழ் மக்கள் மீது நலனுடையவர்களாக இருந்தால் இன்றைய தினத்திலேயே இராஜினாமா செய்யவேண்டும் " இவ்வாறு ஈபிஆர்எல்எப் இன் பத்மநாபா மன்றத்தின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெட்னம் தெரிவித்துள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்த அவர் இங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்ää
பௌத்த நாடுääபௌத்த தேசம் என்று கூறிக்கொண்டு காவியுடை தரித்தவர்களினால் தமிழர் பகுதி கபளீகரம் செய்யப்படுகின்றதா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் காணப்படுகின்றது.
கடந்த நான்கு மாதங்களாக கிழக்கு மாகாணத்தில் 3780 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இதுவரையில் எந்தவித கொடுப்பனவும் வழங்கப்படவில்லையெனவும் அதனை வழங்க ஜனாதிபதி நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள்விடுத்தார்.
Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு